close
Choose your channels

ரயில்வே ஊழியரை கட்டி வைத்து உதைத்த தமிழ் நடிகர்? காவல் நிலையத்தில் புகார்!

Thursday, September 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரயில்வே ஊழியர் ஒருவரை தமிழ் நடிகர் ஒருவர் கட்டி வைத்து நாள் முழுவதும் அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற 56 வயது ரயில்வே ஊழியர், மறைந்த நடிகர் அலெக்ஸின் மருமகனும் நடிகருமான ஜெரால்ட் என்பவரிடம் 35,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனுக்கு இது வரை வட்டி கட்டி வந்த அவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில மாதங்களாக வட்டி பணம் கட்டவில்லை என்று தெரிகிறது

இதனை அடுத்து சமீபத்தில் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை 3 பேர் வழிமறித்து இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர். பின்னர் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு இடத்தில் வட்டி மேல் வட்டி கேட்டு அடித்து உதைத்ததாக தெரிகிறது

இந்த நிலையில் அவர்களிடம் கால அவகாசம் கேட்டு தப்பிவந்த ஆறுமுகம், போலீசாரிடம் புகார் அளித்தார். நடிகர் ஜெரால்டு அடியாட்களை வைத்து தன்னை கடத்தி நாள் முழுவதும் மிரட்டி அடித்து உதைத்ததாக அந்த புகாரில் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.