close
Choose your channels

ஏ.ஆர். ரஹ்மான் தான் இது எல்லாத்துக்கும் காரணம்: யுவன்ஷங்கர் ராஜா

Saturday, June 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏ.ஆர். ரஹ்மான் தான் இது எல்லாத்துக்கும் காரணம் என யுவன்சங்கர்ராஜா அளித்த பேட்டியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

துபாயில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா உள்பட தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை அடுத்து தான் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானின் துபாய் ஸ்டுடியோவுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது

இந்த நிலையில் சமீபத்தில் யுவன்ஷங்கர் ராஜா அளித்த பேட்டியில் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியபோது ’துபாயில் இசைநிகழ்ச்சி நடத்தியதற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் தான் காரணம். எங்கள் ஊரில் இருக்கும் இசைக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டால்தான் நான் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவேன், நீங்கள் ஷகிரா போன்ற இசைக் கலைஞர்களை மட்டுமே அழைத்து வருகிறீர்கள், எங்கள் ஊரிலும் சிறந்த இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று இளையராஜா உள்பட எங்களின் பெயர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார். அதன்பின்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எங்களையும் எக்ஸ்போ இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos