விக்ரமுடன் வேலை செய்யும்போது மன அழுத்தம் இல்லை. பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,April 17 2017]

சீயான் விக்ரம் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் நேரிலும் தொலைபேசியிலும் இணையதளங்கள் மூலமும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் விக்ரம் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'துருவ நட்சத்திரம்' படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் 'விக்ரமுக்கும் பிறந்த நாள் வாழ்த்து கூறியதோடு உங்களுடன் இணைந்து பணிபுரிவதால் மன அழுத்தம் இல்லாமல் இருக்கின்றது' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது டீசர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசர் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த டீசரின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய உளவுத்துறை அதிகாரியாக விக்ரம் நடித்து வரும் இந்த படத்தில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கவுதம் மேனனின் ஆஸ்தான படப்பிடிப்பு தளமான அமெரிக்காவில் குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

More News

சரவணா ஸ்டோர் ஓனருடன் நயன்தாரா நடிப்பது உண்மையா?

கடந்த இரண்டு நாட்களாக மிமி கிரியேட்டர்களுக்கு கிடைத்த அல்வா போன்ற விஷயம் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அவர்கள் நயன்தாராவுடன் நடிக்கவுள்ளதாக வந்த செய்திதான். ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூகவலைத்தளங்கள், இணையதளங்களும் இந்த செய்தியை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இரட்டை இலை லஞ்ச விவகாரத்தில் தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெறுவதற்காக அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் ரூ.60 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதற்கு அட்வான்ஸாக ரூ.1.30 கோடி வரை பெற்றதாகவும் டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவர் இன்று காலை செய்யப்பட்டார்...

சரத்குமாரின் 'இரண்டாவது ஆட்டம்' ஆரம்பம்

பிரபல நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், கடந்த 2015ஆம் ஆண்டு நடித்த 'சண்டமாருதம்' படத்திற்கு பின்னர் தமிழில் வேறு படங்களில் நடிக்கவில்லை...

டெல்லியில் கைதான சுகேஷ் சந்திரா யார் என்றே எனக்கு தெரியாது! டிடிவி தினகரன்

ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான 'இரட்டை இலை'யை கைப்பற்றும் அணியே உண்மையான அதிமுக என பொதுமக்கள் கருதுவார்கள் என்பதால் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் அந்த சின்னத்தை பெற கடுமையாக போராடி வருகின்றன...

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி பேரமா? டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளந்தது. இதன் காரணமாக அதிமுகவின் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது...