close
Choose your channels

தினகரனுக்கு குவியும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு: சென்னையில் ஒரு கூவத்தூர்?

Tuesday, June 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திகார் ஜெயில் இருந்து திரும்பி வந்த தினகரன் நேற்று பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்தது முதலே தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
சற்று முன்வரை தினகரனுக்கு 18 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு இருந்த நிலையில் இந்த நிமிடம் வரை அவருக்கு 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் இப்படியே போனால் இன்று மாலைக்குள் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தனக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க சென்னையிலேயே ஒரு மினி கூவத்தூர் ரிசார்ட் தயார் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலா குடும்பத்தவர்களுடன் இனி எந்த தொடர்பு வைக்க போவதில்லை என உறுதியுடன் இருக்கும் முதல்வர் பழனிச்சாமி நிலை தற்போது பரிதாபகரமாக உள்ளது. 122 எம்.எல்.ஏக்கள் கடந்த பிப்ரவரியில் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது அவர்களில் 21 பேர் திடீரென உதயமான தினகரன் அணிக்கு சென்றுவிட்டதால் முதல்வர் கடும் நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த குழப்பங்கள் குறித்து கருத்து கூறிய ஓபிஎஸ், 'தற்போது தமிழக அரசியலில் குழப்பமான நிலை நிலவி வருகிறது. இதன் முழு விபரங்கள் தெரிந்தால் மட்டுமே நான் கருத்து கூற முடியும். நான் ஏற்கனவே கூறியது போல சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் கட்சியில் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என்று கூறினார்.
ஆக மொத்தம் மீண்டும் ஊடகங்களுக்கு பிரேக்கிங் நியூஸ் சீசன் வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.