close
Choose your channels

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இருந்த 400 கிலோ தங்கம் எங்கே? புதிய தகவல்

Thursday, June 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மாதம் சென்னை தி.நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டு அந்த கட்டிடத்தின் 7 மாடிகளிலும் இருந்த ஜவுளிகள் சாம்பலாகின. இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் இயங்கி வந்த குமரன் நகை மாளிகையில் இருந்த தங்க நகைகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

இருப்பினும் இந்த கட்டிடத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த பெட்டகங்களில் 400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் இருந்ததாகவும், இந்த பெட்டகங்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் நடந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த செய்தியின்படி இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இரண்டு பாதுகாப்பு பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பெட்டகங்களை திறந்து பார்த்தால்தான் அதில் வைக்கப்பட்டிருக்கும் நகைகள் உருகியுள்ளதா? அல்லது பத்திரமாக இருக்கின்றதா? என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.