close
Choose your channels

கருணைக்கொலை கதையில் நடிக்கும் தன்ஷிகா

Tuesday, July 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான், ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகை தன்ஷிகா, பாலாவின் 'பரதேசி' படத்திற்கு பின்னர் ஒரு மெச்சூரிட்டி நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது நாகராஜன் இயக்கி வரும் காலக்கூத்து' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.


மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தன்ஷிகா நடித்து வருகிறார். இதுகுறித்து தன்ஷிகா கூறியபோது,
'இந்த படத்தில் ஒரு கிளாமரான கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கின்றேன். இந்த படம் கருணைக்கொலையை அடிப்படையாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த படத்தின் கதை குறித்து வேறு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக இந்த கதை ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கருணைக்கொலை குறித்து எத்தனையோ சம்பவங்களை நாம் படித்திருக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம், ஆனால் ஸ்கிரீனில் பார்ப்பது இதுதான் முதல் தடவையாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் பிரசன்னா வில்லன் கேரக்டரில் நடித்திருப்பதாகவும், ஸ்ருஷ்டி டாங்கே அவருக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு முண்டாசுப்பட்டி பட புகழ் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை சுமார் 50% படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.