close
Choose your channels

ஜெயலலிதா செய்தது மிகபெரிய தவறு! நாஞ்சில் சம்பத்

Wednesday, May 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தினகரன் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுகவில் தினகரன் அணியை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவது தெரிந்ததே. தினகரனை தொடர்ந்து ஆதரிப்பதால் யாராவது தன்னை காறி துப்பினாலும் அதை துடைத்துவிட்டு செல்வேன் என்று சமீபத்தில் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அதிமுக என்னும் பேரியக்கத்தை கடந்த பல ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக வைத்திருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே ஒருசில விஷயங்களில் தவறு செய்துள்ளதாக பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை தான் ஜெயலலிதா இரண்டு முறை தமிழக முதல்வராக தேர்வு செய்தார், அவரது தேர்வு சரியா? என்ற கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், 'ஓபிஎஸை முதல்வராக அடையாளம் காட்டியது ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு.
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை'
என்ற குறளைப் போல...ஒரு தகுதியற்றவரை, ஒரு பச்சைத் துரோகியை, கட்சியைக் காட்டிக் கொடுக்கிறவரை ஜெயலலிதா முதல்வராக மட்டுமின்றி கட்சியில் வைத்திருந்ததே தப்புதான்' என்று கூறினார். மேலும் மனிதர்களை போலவே கயவர்களும் இருப்பதால் துரோகிகளை எளிதில் அடையாளம் காண்பது சிரமம்தான் என்றும் அவர் மேலும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.