close
Choose your channels

ஜெயலலிதா சிகிச்சை படம் விரைவில் வெளியீடு: ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் அம்மா அதிமுக

Wednesday, May 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குறிப்பாக அவரது அறையில் இருந்த சிசிடிவி அகற்றப்பட்டது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் பல்வேறு கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்.

குறிப்பாக ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று கர்நாடகா மாநில அதிமுக அம்மா கட்சியின் செயலாளர் புகழேந்தி இன்று மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட அனுமதிக்காக காத்திருக்கிறோம். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சையே அளிக்கப்பட்டது. சிகிச்சையின்போது உடனிருந்த பன்னீர்செல்வம் தற்போது சிபிஐ விசாரணை கேட்கிறார். ஜெயலலிதா புகைப்படங்கள் வெளியானால் பலரது முகத்திரை கிழிக்கப்படும். புகைப்படத்தை வெளியிட்டால் எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.