close
Choose your channels

10 வருடங்களுக்கு பின் அஜித் பட இயக்குனரின் அடுத்த படம்

Monday, March 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், அசின் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆழ்வார்'. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதால் இந்த படம் வெளிவந்து பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இந்த படத்தின் இயக்குனர் ஷெல்லாவிற்கு வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இடையில் இரண்டு படங்களை இவர் இயக்குவதாக இருந்து பின்னர் அவை கைவிடப்பட்டது.

இந்நிலையில் சரியாக பத்து வருடங்களுக்கு பின்னர் தற்போது ஒரு படத்தை ஷெல்லா இயக்கவுள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'ஒருமுகத்திரை' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சுரேஷ் தயாரித்து நடிக்கும் அடுத்த படத்தை தான் ஷெல்லா இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சுரேஷ் மலேசியாவில் வெளியாகும் தமிழ் மற்றும் இந்திப்படங்களின் விநியோகஸ்தரான சுரேஷ், சமீபத்தில் ஷெல்லா கூறிய கதையை கேட்டு திருப்தி அடைந்து உடனே வேலையை தொடங்கும்படி கூறிவிட்டாராம். இந்த படத்தில் சுரேஷூக்கு ஜோடியாக 'ஒருமுகத்திரை' படத்தின் நாயகி ரெஜினா நடிக்கவுள்ளாராம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.