close
Choose your channels

கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா 'கட்டப்பா' சத்யராஜ்?

Thursday, April 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி 'பாகுபலி 2' திரைப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கர்நாடகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் காவிரி பிரச்சனை தொடர்பாக பேசிய சத்யராஜ் கன்னடர்கள் குறித்து சர்ச்சைகுரிய வகையில் விமர்சனம் செய்ததாகவும், எனவே அவர் நடித்த படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம்' என்றும் வாட்டாள் நாகராஜ் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

வாட்டாள் நாகராஜ் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கன்னட அமைப்புகள் இருப்பதால் அவருடைய எதிர்ப்பால் கர்நாடக மாநில திரையரங்கு உரிமையாளர்கள் 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்ய தயங்கி வருகின்றனர்.

இதேபோல் ஒரு நிலைமை கடந்த சில வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த 'சிவாஜி' படத்திற்கு ஏற்பட்டபோது ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தற்போது சத்யராஜூக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் அவர் மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.