close
Choose your channels

உண்மை வென்றது! பாவனா சகோதரரின் நெகிழ்ச்சியான அறிக்கை

Tuesday, July 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் பிரபல நடிகர் திலீப் இருப்பதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மேலும் திலீப் மனைவியும் பிரபல நடிகையுமான காவ்யா மாதவனும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாவனாவின் சகோதரரும் 'பட்டினப்பாக்கம்' படத்தின் இயக்குனருமான ஜெயதேவ், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடவுளுக்கு நன்றி

இந்தப் பிரச்சினையில் இறுதியில் உண்மை வென்றுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கின் விசாரணைக்கு ஏற்பட்ட பல்வேறு குறுக்கீடுகளுக்கு மத்தியில் உண்மை வெற்றி பெற கடவுள் எங்களுக்கு துணை நின்றிருந்தார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாங்கள் மேல்முறையீடு செய்யாததற்கு முக்கிய காரணம் நாங்கள் கேரள காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கை. அதுமட்டுமின்றி நீதி வெல்லும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணம்.

எங்களுடன் துணை நின்ற அனைவருக்கு எங்களது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்காக குரல் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக எந்தவித அழுத்தத்துக்கும் அடிபணியாமல் நடவடிக்கை எடுத்த கேரள போலீஸாருக்கும் எங்களுடைய நன்றி.

உலகம் முழுவதும் பல்வேறு திசைகளில் இருந்தும் எங்கள் மீது நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. குற்றவாளிகள் அனைவருமே சிறைக்கு அனுப்பப்படும்வரை அனைவரது ஆதரவையும் இதேபோன்று எதிர்பார்க்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.