close
Choose your channels

அந்த சவுண்டு ஜெயிக்கும். பிக்பாஸ் பரணி குறிப்பிட்டது யாரை?

Monday, July 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட பரணி, இந்த வாரம் கமலுடன் கலந்துரையாடினார். இருவரும் ஒரே ஊர்க்காரரக்ள் என்பதால் பேச்சில் ஒரு அந்நியோன்யம் தென்பட்டது.
தன்னை சக போட்டியாளராக பார்க்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, சக மனிதராக கூட பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய பரணி, அந்த வீட்டில் தலைவர் பேச்சை கேட்பதா? அல்லது தலைவர் ஆகப்போகிறவர் பேச்சை கேட்பதா? என்பதில் தனக்கு குழப்பம் ஏற்பட்டதாக கூறினார்.
மேலும் அங்கிருந்த 30 கேமிராக்கள் கூட தன்னை எந்தவிதத்திலும் பயமுறுத்தவில்லை என்றும் தன்னால் அங்கிருந்த பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அங்கிருந்தவர்கள் தன் காதுபடவே பேசியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் பரணி மிக வருத்தத்துடன் பேசினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் ஜெயிக்க வாய்ப்பு இருக்கின்றது என்று கமல் கேட்க, 'அதற்கு நான் வெளியேறும் போது ஒரே ஒரு குரல் மட்டும் 'பை பரணி' என்று கூறியது. அந்த குரலுக்குரியவர் ஜெயிப்பார் என்று கூறினார். அந்த குரலுக்குரியவர் ஓவியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலியை தான் உடன்பிறந்த தங்கை போல் நினைத்ததாகவும், அவர் கூட தான் வெளியேறுவதையே விரும்பியதாகவும் கூறிய பரணி, திருமணமாகி சென்ற தங்கையாக அவரை நினைத்து மன்னித்துவிட்டதாகவும் பரணி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதால் பரணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நேயர்கள் பலர் எதிர்பார்த்தனர். இருப்பினும் சொந்த ஊர்க்காரராக இருந்தாலும் விதி, விதிதான் என்ற வகையில் கமல், பரணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தரவில்லை. இருப்பினும் பரணி பேசிய பல இடங்களில் கமல் கைதட்டி அவரை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.