close
Choose your channels

விஜய்யின் 'மெர்சலுக்கு சென்னை ஐகோர்ட் திடீர் தடை

Friday, September 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தின் டீசர் நேற்று வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் மேல் பார்வையாளர்களையும், 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று உலக சாதனை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளியாகவுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் 'மெர்சல்' என்ற டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர்  தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. இந்த விசாரணையின் முடிவில்  அக்டோபர் 3ம் தேதி வரை மெர்சல் என்ற தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்து உள்ளது. 

இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அக்டோபர் 3ஆம் தேதி விசாரணையின்போது இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.