close
Choose your channels

இன்று முதல் 'வடசென்னை', வெள்ளி முதல் 'பவர்பாண்டி'

Tuesday, April 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா மற்றும் பலர் நடித்த 'பவர் பாண்டி' திரைப்படம் வரும் வெள்ளி முதல் உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வந்த 'வடசென்னை' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
மூன்று பாகங்களாக உருவாகவுள்ள வடசென்னை படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வடசென்னை கேங்க்ஸ்டர் படமான இந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷ், வெற்றிமாறன் இணைந்த 'பொல்லாதவன்' மற்றும் 'ஆடுகளம்' ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என்பது அறிந்ததே.
தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.