close
Choose your channels

இந்த விஷயம் தோனிக்கும் கோஹ்லிக்கும் தெரிஞ்சா இப்படி செய்வாங்களா?

Monday, September 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சென்னை விமான நிலையத்தில் தரையில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது,.

சென்னை சேப்பாக்க கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிகெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, அடுத்த போட்டிக்காக கொல்கத்தா செல்கிறது., இந்த நிலையில் இன்று காலை விமான நிலையத்திற்கு வந்த இந்திய வீரர்கள் விமான நிலையத்தின் காத்திருப்பு அறை அருகே தரையில் உட்கார்ந்திருந்தனர். 

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ஒரு புகைப்படத்தில் கோலி, பாண்டியா, பும்ரா, ராகுல் ஆகியோர் தரையில் அமர்ந்துள்ளனர். இன்னொரு புகைப்படத்தில் தல தோனி தரையில் ரிலக்ஸாக படுத்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தின் கூரை அவ்வப்போது விழுந்து செஞ்சுரியை நெருங்கி வரும் நிலையில் இந்த விஷயம் செஞ்சுரிகள் அடிக்கும் தோனிக்கும், கோஹ்லிக்கும் தெரிஞ்சா இப்படி உட்கார மாட்டார்கள் என சமூக வலைத்தள பயனாளிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.