close
Choose your channels

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு எங்கே? அதிர்ச்சி தகவல்

Monday, July 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பேர்களில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர். முதலில் நடிகர் ஸ்ரீ உடல்நலமில்லாத காரணத்தாலும், அடுத்து அனுயா மற்றும் கஞ்சா கருப்பு பார்வையாளர்களின் வாக்குகளை குறைவாக பெற்றதாலும் வெளியேறினர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்கள் அவரவர் வீட்டுக்குத்தான் செல்வார்கள் என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கஞ்சாகருப்பு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும், அவருக்கென்று தனியறை ஒன்றை கொடுத்து பிக்பாஸ் சம்பந்தப்பட்ட வேலையை கொடுத்திருப்பதாகவும் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
100 நாள் கழித்தே தன்னால் வீட்டுக்கு செல்ல முடியும் என்றும் அதுதான் ஒப்பந்தம் என்றும் கூறிய கஞ்சா கருப்பு இதற்கு மேல் பேட்டியளிக்க முடியாது என்று கூறி போனை வைத்துவிட்டாராம். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் வீட்டுக்கு செல்ல முடியாது என்பதும், நடிகை அனுயாவும் இதேபோல் தனியறையில் தங்க வைக்கப்பட்டிருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.