close
Choose your channels

யார் இந்த தினகரன்? துணைக்கு பதில் சொல்ல மறுத்த துரைமுருகன்

Thursday, March 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் தனது உறவினர் டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாளராக நியமனம் செய்தார் என்பது தெரிந்ததே. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியும் டிடிவி தினகரன் தலைமையில் கட்சியும் நடந்து வரும் நிலையில் நேற்று இரவு தினகரன் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களிலும் திமுக ஊழல் செய்த கட்சி என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தினகரனின் இந்த குற்றச்சாட்டு குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'யார் இந்த தினகரன்? என்று தனக்கே உரிய நக்கலுடன் செய்தியாளர்களை பார்த்து கேட்டார். அதற்கு செய்தியாளர்கள் 'அவர் அதிமுக துணை பொதுச்செயலாளர் என கூற, 'துணைக்கெல்லாம் பதில் சொல்லி தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை' என்று கூறினார்

ஏற்கனவே கடந்த மாதம் ஓபிஎஸ் அவர்களை திமுக தான் பின்னால் இருந்து இயக்குவதாக சசிகலா கூறிய குற்றச்சாட்டு ஒன்றுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் சசிகலாவுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.