close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நகைச்சுவை நடிகர்

Monday, July 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டையும், கடுமையான விமர்சனத்தையும் மாறி மாறி பெற்று வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஓவியா, பரணி, கஞ்சா கருப்பு ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில், நேயர்களின் வாக்குகளை குறைவாக பெற்ற கஞ்சாகருப்பு வெளியேற்றப்படுவதாக நேற்று கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து கஞ்சாகருப்பு மற்ற பங்கேற்பாளர்களிடம் விடை பெற்று வீடு திரும்பினார்.

பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறியவுடன் கமல்ஹாசனிடம் பேசிய கஞ்சாகருப்பு, 'பிக்பாஸ் இல்லத்தில் இருந்த இந்த சில நாட்களில் தான் ஆரவ்விடம் இருந்து சமையல் நுணுக்கங்களை கற்று கொண்டதாகவும், கணேஷ் வெங்கட்ராமனிடம் இருந்து யோகாவை கற்று கொண்டதாகவும் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராமன் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறிய கஞ்சாகருப்பு, 'தயவுசெய்து பரணியை உடனடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். மேலும் நமீதா தான் தினமும் போட்டுக்கொடுக்கும் இஞ்சி டீயை மிஸ் பண்ணுவார் என்றும் அவர் வருத்தத்துடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.