close
Choose your channels

இளையதளபதியிடம் பாராட்டு பெற்ற தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்

Saturday, March 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த 3.5 வயது பிரிஎல்.கே.ஜி மாணவி நேத்திரா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் வரும் மே மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017" என்ற போட்டியில் A.P. நேத்திரா கலந்துகொள்ள உள்ளார்.
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் முன்னர் அம்மாணவியை இளையதளபதி விஜய் அவர்களிடம் காண்பித்து அவரின் பாராட்டையும், ஊக்குவிப்பையும் பெற அவரது பெற்றோர்கள் ஆசைப்பட்டனர்.
இதனை அறிந்த இளையதளபதி விஜய் அவர்கள் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோஷியேஷன் உறுப்பினர்களையும், Josh Queen Club உறுப்பினர்களையும், மாணவியர், பெற்றோர்களையும், நேத்திராவையும் நேரில் அழைத்து மனமார்ந்து பாராட்டி, ஊக்குவித்தார். இச்சந்திப்பின்போது இளையதளபதி விஜய் அவர்களுடன் தமிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோஷியேஷனின் பொதுச்செயலாளர் S.முருகானந்தம், பொருளாளர் மு.கௌதம், சேலம் மாவட்டம் பொதுச்செயலாளரும் Josh Queen Club -ன் உரிமையாளரும் பயிற்சியாளருமான K.ராஜேஷ்குமார், A.மேகலா அகியோர்களும் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.