close
Choose your channels

ரசிகரின் வேண்டுகோளை நிறைவேற்றிய சூர்யாவுக்கு விஜய் நன்றி

Saturday, March 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது 'சி 3' படத்தின் புரமோஷனுக்காக கேரளா சென்றிருந்தபோது, மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர், தனது கையினாலே வரைந்த விஜய்யின் ஓவியத்தை சூர்யாவிடம் கொடுத்து அதை விஜய்யிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்த செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் நேற்று சூர்யாவின் 2D என்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநர் ராஜ்சேகர பாண்டியன், சூர்யா சார்பில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அந்த ஓவியத்தை வழங்கியுள்ளார். தனது ரசிகரின் அன்பு பரிசான அந்த ஓவியத்தை பெற்றுக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ராஜசேகர பாண்டியன் கூறியபோது, 'விஜய் சாரின் மேனேஜர் என்னை போனில் அழைத்து, நாங்கள் இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். தற்போது விஜய் சார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், அவரை சந்தித்தேன். புன்னகையுடன் அந்த பரிசை வாங்கிக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.