close
Choose your channels

அர்த்தம் தெரியாமல் நடித்தார் அனுராக் காஷ்யப்: 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்

Monday, June 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று கொண்டிருக்கின்றது.
நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாலிவுட் பிரபலமான அனுராக் காஷ்யப் இந்த படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பு குறித்து இயக்குனர் அஜய்ஞானமுத்து கூறியபோது, 'அனுராக் காஷ்யப் இதுவரை நடித்த படங்களில் உடற்பயிற்சியோ, சண்டையோ செய்ததில்லை. ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு 'க்ரவ் மாகா' என்ற மிகவும் வேகமாக சண்டை போடும் காட்சி உள்ளதால் அவர் ஒவ்வொரு நாளும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படுவதற்கு முன்பே பயிற்சி எடுத்துவிட்டு தான் வருவார்.
மேலும் அவருக்கு தமிழ் தெரியாததால் அவருடைய காட்சிகளுக்கு தேவையான தமிழ் வசனங்களை இரண்டு நாட்களுக்கு முன்பே தங்கிலிஷ் மற்றும் இந்தி என இரண்டிலுமே கொடுத்துவிடுவோம். அதில் எங்கெல்லாம் இடைவெளி விட்டு பேச வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் முதற்கொண்டு தெளிவாக இருக்கும். அதை முழுமையாக படித்து உள்வாங்கி, அப்படியே படப்பிடிப்பு தளத்தில் பேசுவார். அது தமிழ் நடிகர் வசனம் பேசி நடிப்பது போலவே இருக்கும். அவருக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும், பேசும் முறை தெளிவாக இருக்கும்" என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.