close
Choose your channels

லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

Sunday, June 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மான்செஸ்டர் நகரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அந்நாட்டு மக்கள் மீள முடியாத நிலையில் இன்று மீண்டும் லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

லண்டன் நகரில் உள்ள முக்கிய பகுதியான பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலால் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். கத்தியால் குத்தியும், வேனை விட்டு மோதியும், துப்பாக்கியால் சுட்டும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் லண்டன் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் நாட்டு அணிகள் மோதுகின்றன. லண்டனில் இருந்து சுமார் 100 கிமீ தூரம் உள்ள பிர்மிங்காம் என்ற இடத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தபோதிலும், போட்டியை ரத்து செய்வது குறித்து ஐசிசி இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் இன்று போட்டி நடந்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று மட்டும் இப்போதைக்கு தகவல் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.