close
Choose your channels

அன்பானவர் அசராதவர் பிரமாதமானவர்: அஜித், விஜய், சூர்யா குறித்து காஜல்

Thursday, July 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்து கொண்டிருக்கும் பெருமையை பெற்றவர் காஜல் அகர்வால். மேலும் கோலிவுட்டின் இன்னொரு முக்கிய நடிகரான சூர்யாவுடனும் நடித்தவர். இந்த நிலையில் அஜித், விஜய், சூர்யா குறித்து காஜல் அகர்வால் பேட்டி ஒன்றில் கூறிய கருத்துக்களை பார்ப்போம்.

அன்பு, மரியாதையுடன் செட்டில் அனைவரையும் சமமாக நடத்துபவர் அஜித். யாருக்கும் அட்வைஸ் செய்ய மாட்டார். ஆனால் அவரை சும்மா கவனித்தாலே போதும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் அவருடைய பிரியாணி எல்லோருக்கும் ஸ்பெஷல். எனக்கும் செய்து கொடுத்தார். சான்ஸே இல்லை அவ்வளவு டேஸ்ட் என்று அஜித் குறித்து காஜல் கூறினார்.

விஜய் குறித்து அவர் கூறியபோது, 'நல்ல கடின உழைப்பாளி, செட்டில் அமைதியாக இருந்தாலும் கேமிரா ரோல் ஆக ஆரம்பித்தவுடன் நடிப்பில் அனைவரையும் அசரடிப்பார். வெற்றி தோல்விகளை தலையில் ஏற்றிக்கொள்ள பக்குவத்தை அவரிடம் இருந்துதான் அனைவரும் கற்று கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

சூர்யா குறித்து காஜல் கூறியபோது, 'சூர்யா, பிரமாதமான நடிகர். நடிப்புல மாஸ்டர். ஒரு கேரக்டருக்காக அவ்வளவு மெனக்கெடுவார்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.