close
Choose your channels

சொல்லித்தான் பாருங்களேன்! கமல் சகோதரர் சாருஹாசன் சவால்

Thursday, July 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாதுவாக இருக்கும் நேர்மையாளர்களை சீண்டிவிட்டால் காடு கொள்ளாது என்ற மொழிக்கேற்ப கமல் உண்டு, அவருடைய உயிர்மூச்சான சினிமா உண்டு என்று இருந்தவரை ஒருசில அரசியல்வாதிகள் சீண்டிவிட்டதன் விளைவாக தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமல் கேட்கும் கேள்விகளுக்கே பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் திணறி வரும் நிலையில் தற்போது கமல் சகோதரர் சாருஹாசனும் களத்தில் குதித்துவிட்டார். ஆம், சாருஹாசன் தனது சமூக வலைத்தளத்தளத்தில் கூறிய காரசாரமான கருத்துக்கள் இவைதான்:
மாண்புமிகு அமைச்சர் ஜெயகுமார் அவர்களுக்கு, '60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்? குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம். கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்..
ஒன்று புரிகிறது அதிமுகவில் ஜெயகுமார் ஒருவர்தான் இதுவரை லஞ்சம் வாங்காதவர் போல தெரிகிறது.... ஆனால் ஊழலுக்கு இன்று துணை போகிறாரே.. ஆட்சியில் இருக்கும் மந்திரி வீட்டில ரெய்டு, பிரபல காண்ட்ரக்டர்கள் வீட்டில் கிடைத்த லஞ்ச லிஸ்ட் .. நீங்கள் வணக்கத்துடன் நடத்தும் ஆட்சி லஞ்ச ஊழலுக்கு சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி நடக்கவில்லை என்றுகூட சொல்ல முடியவில்லை. ?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.