close
Choose your channels

சி.ஆர்.பி.எப் வீரரின் பொறுப்பான தியாகமும், கமல்ஹாசனின் ஆதரவும்

Friday, April 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது பாதுகாப்புக்கு சென்றிருந்த சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் தேர்தல் முடிந்தவுடன் மின்னணு வாக்கு இயந்திரத்தை எடுத்து கொண்டு அலுவலகம் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் இருந்த பிரிவினைவாதிகள் சிலர் சி.ஆர்.பி.எப் வீரரை அவமானமாக பேசியதோடு அவரை தாக்கவும் செய்தனர். 'இந்தியாவுக்கு போ' என்று கூறியபடி அந்த வீரரை அவர்கள் தாக்கினர். இந்த தாக்குதலில் வீரரின் தொப்பி கழன்று ஓடியது. அவரது கையில் துப்பாக்கி இருப்பினும் அவர் அமைதியாக திரும்பி சென்றார். இந்த தாக்குதல் குறித்து பின்னர் கருத்து தெரிவித்த அந்த சி.ஆர்.பி.எப் வீரர், தன்னிடம் இருந்த மின்ன்ணு வாக்கு இயந்திரத்தை பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதில்தான் தனது கவனம் முழுவதும் இருந்ததாக தியாக மனப்பான்மையுடனும் பொறுப்புடனும் பதில் கூறினார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'எனது வீரரை தொட்டு தாக்கிய சம்பவம், தாக்கியவர்களுக்கு ஒரு அவமானம். மிகச்சிறந்த வீரம் என்பது அஹிம்சையே. இதற்கு அந்த சி.ஆர்.பி.எப் வீரரே சிறந்த உதாரணம்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.