close
Choose your channels

வளர் பெளர்ணமி போல் வளர வளர்மதிக்கு வாழ்த்து. கமல்

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த துண்டு சீட்டு கொடுத்த இதழியல் மாணவி வளர்மதியை சமீபத்தில் கைது செய்த தமிழக அரசு அவர் மீது குண்டர் சட்டத்தையும் போட்டது.

ஒரு நாட்டின் சட்ட ஒழுங்கை பாதிக்கும் நபர் மீதுதான் குண்டர் சட்டம் போடப்படும், ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுச்சீட்டு கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் போட்டது தமிழக வரலாற்றில் இதுதான் முதல்முறை

 

இந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட் வளர்மதி மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்கி உத்தரவிட்டது. இது வளர்மதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமல் வழக்கம்போல் ஒரு டுவீட் பதிவு செய்துள்ளார். 

அந்த டுவீட்டில், 'வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்' என்று கூறியுள்ளார். இந்த டுவீட்டுக்கு 'வளர்மதி பெளர்ணமியை போல் வளர வாழ்த்துக்கள், இன்னும் நீதி சாகவில்லை என்று குண்டர் சட்டத்தை நீக்கிய நீதிபதிக்கு வணக்கம்' என்பது பொருள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.