close
Choose your channels

பாண்டவர் அணியை கமல் தூண்டிவிடுகிறார். சரத்குமார் குற்றச்சாட்டு

Saturday, October 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் மனுதாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்ட நிலையில் பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணியை கமல்ஹாசன் தூண்டிவிடுவதாக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய படங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டபோது, அந்த படங்கள் வெளிவர தான் தீவிர முயற்சி எடுத்ததாகவும், ஆனால் கமல் அதற்காக தனக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை என்று கூறிய சரத்குமார், தான் எப்போதுமே நன்றியை எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்வதில்லை என்றும் கூறினார்.

விஷால் அணியினர்களை கமல்தான் தூண்டிவிடுகிறார் என்று கூறிய சரத்குமார், இருப்பினும் தங்கள் அணி வெற்றி பெறும் என்றும் கூறினார். விஷால் அணிக்கு கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிப்படையாகவே தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.