close
Choose your channels

நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணிடம் சில்மிஷம். பிரபல தயாரிப்பாளர் கைது

Tuesday, March 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், நடிகைகளின் ஆடம்பரமான வெளிப்புற பகட்டை நம்பி திரையுலகில் நாமும் சாதிக்கலாம் என்று நாள்தோறும் புதிய முகங்கள் திரையுலகில் நுழைய முயற்சித்து வருகின்றனர். அவ்வாறு வரும் இளம்பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கினால் அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி வருவது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
அந்த வகையில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளர் விரேஷ். இவரிடம் பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்துள்ளார். அவருக்கு திரைப்பட வாய்ப்பு வழங்குவதாகக் கூறிய தயாரிப்பாளர் விரேஷ், கதை டிஸ்கஷ்னுக்காக தனது இடத்திற்கு அழைத்து சென்றார்.
பின்னர் கதைகூறும் சாக்கில் அந்த பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயற்சிச் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பித்து தனது உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் விரேஷை அடித்து உதைத்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் விரேஷை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.