close
Choose your channels

லைகாவுடன் மீண்டும் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Tuesday, July 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா புரடொக்ஷன்ஸ் தயாரித்த முதல் படமான 'கத்தி' திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கினார் என்பது தெரிந்ததே. தளபதி விஜய் இரண்டு வேடங்களில் நடித்த இந்த படம் ரிலீசுக்கு முன் பல பிரச்சனைகளை சந்தித்த போதிலும் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையவுள்ள அடுத்த படத்தையும் லைகா தயாரிக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி பின்னர் மறுக்கப்பட்டு தற்போது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆ.ர்முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.