close
Choose your channels

சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். கவர்ன்ரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சற்றுமுன்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏற்றுக்கொண்டது முதலும், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்று கொண்டது முதலும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. சுருக்கமாக சொல்வது என்றால் தமிழகத்தை பொறுத்தவரை அரசு முடங்கி போயுள்ளது

மேலும் தற்போதுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு முடிவு காண அரசியல் சாசன அடிப்படையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் மனு கொடுத்துள்ளோம். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட ஆளுனரிடம் கோரிக்கை வைத்ததாக கூறிய ஸ்டாலின், அதிமுகவின் குழப்ப நிலைக்கு திமுகதான் காரணம் என்ற சசிகலாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.