close
Choose your channels

'த்ரிஷ்யம்' இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா

Wednesday, July 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' என்ற மாபெரும் வெற்றித் திரைப்படம் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு, அனைத்திலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தை அவரே தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்தார். இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை செய்துள்ளது. இந்நிலையில் ஜீத்து ஜோசப்பின் அடுத்த படத்தை இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது.

ஜீத்து ஜோசப் தற்போது 'லைப் ஆப் ஜோசூட்டி' (Life of Josutty) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திலீப், ரக்ஷனா நாராயனகுட்டி, கலாபவன் மணி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். த்ரிஷ்யம் படத்திற்கு இசையமைத்த அனில் ஜான்சன் இசையமைக்கும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்திற்கு பின்னர் மலையாளத்தில் நயன்தாரா வேறு எந்த மலையாள படத்திலும் நடிக்கவில்லை என அனைவரும் நினைத்திருந்த வேளையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா எப்போது நடித்தார் என்பதே பலருக்கு தெரியவில்லை. நயன்தாரா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததை ரகசியமாக வைத்திருந்து ரிலீஸ் நேரத்தில் அறிவிக்க இருந்தார்களாம். ஆனால் தற்போது இந்த தகவல் எப்படியோ கசிந்துவிட்டது.

ஜீத்து ஜோசப்பின் முந்தைய படம் போலவே இந்த படமும் பலமொழிகளில் ரீமேக் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.