close
Choose your channels

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Wednesday, May 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றைய இளையதலைமுறை ரசிகர்களின் ரசனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பழம்பெரும் இயக்குனர்கள் பலர் படம் இயக்குவதையே விட்டுவிட்டனர். ஆனால் இளையதலைமுறையினர்களின் ரசனையை புரிந்து கொண்டு இப்போதும் வெற்றிப்படங்கள் கொடுக்கும் ஒருசில இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிகுமார்.

கடந்த 1990ஆம் ஆண்டு 'புரியாத புதிர்' படத்தின் மூலம் இயக்குனரான அவர் கடந்த ஆண்டு இயக்கிய 'முடிஞ்சா இவனை பிடி' வரை பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

கே.எஸ்.ரவிகுமார் இம்முறை இயக்கவுள்ளது ஒரு தெலுங்கு படம். இந்த படத்தின் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். இந்த படம் அவருக்கு 102வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சி.கல்யாண் தயாரிக்கும் இந்த படம் வரும் ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.