close
Choose your channels

முதல்வரின் கையை வெட்டுவதாக கூறிய கலைராஜன் மீது வழக்குப்பதிவு

Monday, February 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஒபிஎஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய இருவரில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்ற பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் இருதரப்பினர்களின் ஆதரவாளர்களும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சசிகலா அணியின் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கலைராஜன் ஊடகத்தின் முன் பேசியபோது, 'அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் முயற்சித்தால் அவருக்கு கை இருக்காது' என்று பேசினார். கலைராஜனின் இந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது பேச்சு முதல்வரை மிரட்டும் அளவில் இருப்பதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான செல்லப்பாண்டியன் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து கொலைமிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கலைராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர். தன் மீது வழக்குப்பதிவு செய்தது குறித்து கலைராஜன் கூறியபோது, 'முதல்வர் குறித்து பேசியது தவறு என்று ஒப்புக்கொண்ட பிறகும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தம் மீது அரசியல் பழி வாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.