close
Choose your channels

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்! அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

Tuesday, July 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில் நேற்றிரவு அவர் சென்னை திரும்பினார். ரஜினி சென்னை திரும்பிவிட்டதால் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

'காலா' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் 'தாராவி' போன்ற செட் தயாராக உள்ளது. அமெரிக்காவில் இருந்து ரஜினி திரும்பியதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதியும், ரசிகர்களை ரஜினி சந்திக்கும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் ரஜினி அமெரிக்காவில் இருந்தபோது கேசினோ ஒன்றில் அவர் சூதாடியதாக எழுந்த புகாருக்கும் அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரசிகர்களுடனான அடுத்தகட்ட சந்திப்பில் அரசியலில் குதிப்பது குறித்து ரஜினி தனது முடிவை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.