close
Choose your channels

அஜித்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுமா? ராஜ்கிரண்

Wednesday, April 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண் தனுஷ் இயக்கத்தில் நாயகனாக நடித்த 'பவர்பாண்டி' திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் ராஜ்கிரண் சமீபத்தில் இந்த படம் குறித்தும் அஜித்துடன் 'கிரீடம்' படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'கிரீடம்' படத்தில் அஜித்தின் தந்தையாக நடித்த ராஜ்கிரண், அந்த அனுபவங்கள் குறித்து கூறியபோது, 'அஜித் மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் இதுவரை பார்த்தது இல்லை. 'கிரீடம்' படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அஜித் கடும் முதுகுவலியால் அவதிப்பட்டார். அப்படி இருந்தும் தன்னால் தயாரிப்பாளருக்கு சிறு நஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கடுமையான வலியையும் பொறுத்துக்கொண்டு படத்தை முடித்து கொடுத்தார். ஒரு ஐந்து நிமிடம் அவரால் நாற்காலியால் உட்கார முடியாத நிலை இருந்தும் அந்த வலியை தனக்குள் மறைத்து கொண்டு நடித்தவர் அஜித்' என்று கூறினார்.
மேலும் அஜீத், சின்ன நடிகர் பெரிய நடிகர் என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமாக மதிப்பு கொடுப்பவர்' என்று அஜித்தை ராஜ்கிரண் புகழ்ந்து பேசினார்.
கடந்த சில வருடங்களாகவே கோலிவுட் நடிகர்கள் தாங்கள் நடித்த படம் வெளியாகும் ஒருசில தினங்களுக்கு முன்னர் அஜித் குறித்து பெருமையாக பேசி தங்கள் படங்களுக்கு புரமோஷன் தேடி வரும் நிலையில் ராஜ்கிரணும் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.