close
Choose your channels

கூவத்தூரில் தங்குகிறார் சசிகலா. எம்.எல்.ஏக்கள் சென்னை வருவது எப்போது?

Monday, February 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக எம்.எல்.ஏக்களை கடந்த ஒரு வாரமாக ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளார். நேற்று மற்றும் நேற்று முன் தினம் என இரண்டு நாட்கள் கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்த சசிகலா, இன்று மீண்டும் மூன்றாவது நாளாக அங்கு செல்கிறார்.

ஆனால் இன்று இரவு சசிகலா கூவத்தூரில் தங்குவார் என்றும் நாளை எம்.எல்.ஏக்களுடன் அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

நாளை காலை 11 மணிக்கு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டால், அந்த தீர்ப்பு சசிகலாவுக்கு சாதகமாக இருந்தால் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் அவர் நாளை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.