close
Choose your channels

லண்டனில் வாள்வீச்சு பயிற்சி பெரும் பிரபல நடிகை

Thursday, May 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர்கள் துணிச்சலாக பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 'பாகுபலி' படத்தின் பட்ஜெட்டுக்கு இணையான பட்ஜெட்டில் தயாராகவுள்ள சுந்தர் சியின் 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் வீரமுள்ள இளவரசி கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். போர்க்காட்சிகளில் வாள்சண்டை காட்சியில் டூப் இல்லாமல் நடிக்க தற்போது ஸ்ருதிஹாசன் லண்டனில் வாள்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது, 'வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வதாகவும், அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார். பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களையும் கற்று வருகிறார். இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதிஹாசன் சண்டையிடும் காட்சிகள் தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று கூறியுள்ளனர்.
ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். சாபுபுசிரில் கலை வண்ணத்தில், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ஏற்கனவே சிவகார்த்திகேயனின் படத்தில் சிலம்புச்சண்டை தத்ரூபமாக வருவதற்காக கடந்த பத்து மாதங்களாக சிலம்பாட்டம் பயிற்சியில் நடிகை சமந்தா ஈடுபட்டிருந்தார் என்பதை பார்த்தோம். ஹீரோக்களை போலவே ஹீரோயின்களும் டூப் இன்றி சண்டைக்காட்சிகளில் நடிக்க பெரும் முயற்சி எடுத்து வருவது கோலிவுட்டின் ஆரோக்கியத்தையே காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.