close
Choose your channels

சிம்புவின் பாங்காங் பயணம் எதற்காக?

Monday, March 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாதா கேரக்டர்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவின் மூன்றாவது கேரக்டரின் படப்பிடிப்பை வரும் 16ஆம் தேதி முதல் பாங்காங் நகரில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பில் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், சந்தானம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் இந்த படத்தை பெரும்பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இதனிடையே சிம்பு, சந்தானம் நடிக்கவுள்ள 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார். அனிருத் மற்றும் குறளரசன் ஆகியோர் ஏற்கனவே இவருடைய இசையில் பாடியுள்ளனர் என்பதை பார்த்தோம். பாங்காங் படப்பிடிப்புக்கு செல்லும் முன்னர் சிம்பு அனைத்து பாடல்களின் ஒலிப்பதிவை முடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.