close
Choose your channels

ரஜினி குறிப்பிட்ட போர் வந்துவிட்டதா? ரசிகர்களுக்கு வந்த ரகசிய உத்தரவு

Friday, August 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது போர் வரும் போது பார்த்து கொள்வோம் என்று முழங்கினார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தனது கட்சியின் மாநாடு ஒன்றை திருச்சியில் வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் என்று ரஜினி தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு ரகசிய உத்தரவு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.,
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியபோது, 'போருக்குத் தயாராக இருங்கள் என்று ரஜினி அழைப்பு விடுத்திருந்தார். நாங்களும் தயாராகத்தான் இருக்கிறோம். எங்களுக்கு ராகவேந்திரா மண்டபத்திலிருந்து காந்திய மக்கள் இயக்கம் நடத்தும் திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த மாநாட்டில் ரஜினி வருவார் என்று நம்புகிறோம்' என்று கூறினார்
ஆனால் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இதனை மறுத்துள்ளார். திருச்சி மாநாட்டை காந்திய மக்கள் இயக்கம்தான் நடத்துகிறது. அந்த மாநாட்டில் ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நான் பேச உள்ளேன். இதனால், ரஜினி ரசிகர்கள் அந்த மாநாட்டுக்கு வரலாம். ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
எனினும் ரஜினி ரசிகர்கள் இந்த மாநாட்டுக்கு ரஜினி வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ரஜினி குறிப்பிட்ட போர் வந்துவிட்டதா? என்பது வரும் 20ஆம் தேதி தெரிந்துவிடும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.