close
Choose your channels

சுசீந்திரனுடன் மீண்டும் இணையும் கார்த்தி

Saturday, June 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை கார்த்தியின் சகோதரர் சுர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் நேற்று வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சுசிந்திரனுடனும் அவர் இணையவுள்ளார்.

ஆம், சுசீந்திரன் இயக்கிய 'அறம் செய்து பழகு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வரும் 12ஆம் தேதி மாலை 4.05மணிக்க்கு கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். இதுகுறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளிவந்துள்ளது. கார்த்தி ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ராந்த், சந்தீப் கிஷான், மெஹ்ரின் பிர்ஜதா, ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ள 'அறம் செய்து பழகு' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவில் காசி விஸ்வாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.