close
Choose your channels

எடுபிடி வேலை பார்த்தவர் எல்லாம் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். டி.சிவா ஆவேசம்

Monday, March 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரம் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷால் அணியினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு சற்று முன்னர் டி.சிவா அவர்கள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவில் வரும் தயாரிப்பாளர்கள் பலர் வீடு, நகையை விற்று கஷ்டப்பட்டு படங்கள் தயாரித்து கொண்டிருக்கும் நிலையில் எடுபிடி வேலை பார்த்தவர் எல்லாம் தெரியாமல் தயாரிப்பாளராகி உள்ளார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

இந்த மாதிரி நபர்களை எல்லாம் மேடையேற்றி பேச வைத்து வேடிக்கை பார்ப்பது அசிங்கமான விஷயம். தேர்தலில் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள். தனி நபர் தாக்குதல் வேண்டாம். யாரைப்பற்றியும் அசிங்கமாக பேசாதீர்கள். வெற்றி பெற்றால் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை மட்டும் பேசுங்கள்.

பழைய பகையை மனதில் வைத்து பேசும் நேரம் தேர்தல் அல்ல. பொதுமேடையில் நாகரீகம் இல்லாமல் பேசும் இவர் போன்றவர் சங்கத்தில் ஒரு பொறுப்பு கிடைத்தால் என்ன செய்வார்? இதை நான் மக்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்

என் மீது 13 குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது என்ன குற்றச்சாட்டு என்று சொல்லவில்லை. ஒரே ஒரு குற்றச்சாட்டு, அல்லது ஒரே ஒரு ரூபாய் ஊழல் செய்ததாக சொன்னால் நான் இப்பவே வெளியே சென்றுவிடுகிறேன்' என்று தயாரிப்பாளர் டி.சிவா பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.