close
Choose your channels

தேசிய அளவிலான பளூதூக்கும் போட்டியில் தமிழ் நடிகை

Tuesday, February 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விளையாட்டு துறையில் சாதனை படைத்த சடகோபன் ரமேஷ், ரித்திகாசிங் போன்ற பலர் சினிமா துறையில் நுழைந்தது போல், சினிமாத்துறையில் உள்ள ஒரு நடிகை விளையாட்டு துறைக்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அவர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றுள்ளார். அவர் மணிரத்னம் இயக்கத்தில் 'ஓகே கண்மணி' படத்தில் நடித்தவரும் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளருமான ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ரம்யா, தற்போது தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இதுகுறித்து ரம்யா கூறியதாவது,

பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி, தற்போது 35 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ளேன்.

போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளேன்' என்று ரம்யா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.