close
Choose your channels

ரஜினியின் ட்வீட்டால் அடித்துக்கொள்ளும் விஜய்-அஜித் ரசிகர்கள்

Wednesday, July 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகினர் தற்போது சந்தித்து வரும் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி பிரச்சனைக்கு அனைத்து திரையுலகினர்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கையாக இருந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று தனது டுவிட்டரில் கேளிக்கை வரியை குறைத்து லட்சக்கணக்கான சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனது கோரிக்கையாக வைத்தார்.
இந்த நிலையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதில் தானாக நுழைந்து முட்டி மோதிக்கொள்ளும் அஜித், விஜய் ரசிகர்கள் ரஜினியின் இந்த டுவிட்டிலும் கடந்த சில மணி நேரங்களாக மோதி வருகின்றனர். விஜய் இன்னும் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அஜித் ரசிகர்களும், அஜித் இந்த பிரச்சனைக்கு மட்டுமின்றி எந்த பிரச்சனைக்குமே குரல் கொடுக்க மறுப்பது ஏன் என்று விஜய் ரசிகர்களும் காரசாரமாக மோதிக்கொண்டு வருகின்றனர். ஒருசிலர் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளையும் பயன்படுத்தி பதிவு செய்கின்றனர்.
அஜித், விஜய் மட்டுமின்றி அனைத்து நடிகர்களும், தயாரிப்பாளர்களும் டெக்னீஷியன்களும் இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது முக்கியம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கமல், ரஜினி குரல் கொடுத்துவிட்டனர். பிரச்சனையை தீர்க்க முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தையும் நடந்து வருகின்றது. இந்த நிலையில் எந்த நேரத்திலும் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கலாம். ஒருவேளை பிரச்சனை நீடித்தால் அஜித், விஜய் உள்பட அனைவரும் கண்டிப்பாக குரல் கொடுப்பார்கள். எனவே இந்த விஷயத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் தேவையில்லாமல் மோதிக்கொள்வதை தவிர்ப்பதே நல்லது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.