close
Choose your channels

நிஜத்தில் 'ஹீரோ'வாக மாறிய 'தெறி' வில்லன்

Wednesday, July 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் தீனா. இவர் சினிமாவில் தான் வில்லன், ஆனால் நிஜத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்த ஒரு ஹீரோவாகியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் தீனா தனது ராயபுரம் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சிறுமி உடல்நலமுற்று இருந்ததை பார்த்து அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவியுள்ளார். தனுஸ்ரீ என்ற அந்த சிறுமிக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்றும் அதற்கு சுமார் ரூ.20 லட்சம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
இதனால் அதிர்ச்சி அடையாத தீனா, உடனே தன்னுடைய ஃபேஸ்புக்கில் அந்த சிறுமியின் நிலையை விளக்கி, அவருடைய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த பதிவினை பார்த்த பல நல்ல உள்ளங்கள் அவர்களால் முடிந்த பணத்தை அனுப்ப, ஒருசில நாட்களில் தேவைக்கும் அதிகமான பணம் குவிந்துவிட்டது.
இந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து தனுஸ்ரீ பூரண குணம் அடைந்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள தீனா, தன்னுடைய கோரிக்கையை ஏற்று பணம் அனுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்றும் தற்போது தனுஸ்ரீ பூரண குணம் அடைந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், தான் சினிமாவில் பெரிய ஆளாக மாறினால் கூட கிடைக்காத சந்தோஷம் தற்போது கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதேபோன்ற சேவையை தொடரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சினிமாவில் வில்லனாகவும், நிஜத்தில் ஹீரோவாகவும் உள்ள தீனாவுக்கு சமூகவலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதே தீனா தான் சமீபத்தில் கோவிலில் பிச்சை எடுத்து வந்த 'காதல்' பட நடிகர் விருச்சிககாந்த் அவர்களை மீட்டு, அவர் தற்போது நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.