close
Choose your channels

ஜாமீன் கிடைத்த சில நிமிடங்களில் முதல் விக்கெட்டை வீழ்த்திய டிடிவி தினகரன்

Thursday, June 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு இன்று டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனில் தினகரன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைப்பதுடன் விசாரணைக்கு கூப்பிடும் நேரம் வரவேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் வெளியான ஒருசில நிமிடங்களில் ஓபிஎஸ் அணியில் இருந்த எம்.எல்.ஏ ஒருவர் சசிகலா அணிக்கு தாவியுள்ளார். மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன், இன்று தினகரன் அணிக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் தினகரன் அணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் டிடிவி தினகரன் சென்னை திரும்பியது மேலும் பல திருப்பங்கள், தாவல்கள் நடைபெறும் என்றும் தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். டிடிவி தினகரனின் வருகை ஓபிஎஸ் அணியை வலுவிழக்க செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.