close
Choose your channels

எந்திரன், எந்திரன் 2ஐ அடுத்து ஷங்கரின் பிரமாண்ட திட்டம்

Monday, October 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியில் உருவான 'எந்திரன்' படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து 'எந்திரன் 2' படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் 'எந்திரன் 2' திரைப்படம் முழுக்க முழுக்க 3D கேமராவில் படமாக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 2D கேமராவில் எடுக்கப்பட்டு பின்னர் 3Dக்கு படத்தை மாற்றி வந்த நிலையில் முதன்முதலான நேரடியாக 3D கேமராவினால் இந்த படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் 'கோச்சடையான்' படத்தின் தொழில்நுட்பமான மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்திலும் ஒருசில காட்சிகள் எடுக்கப்படவிருப்பதாகவும், இந்த காட்சிகளில் ஒருசிலவற்றை 'எந்திரன் 3' படத்தில் ஷங்கர் உபயோகப்படுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே 'எந்திரன் 2' படத்தை தொடர்ந்து 'எந்திரன் 3' படத்தையும் அவர் விரைவில் இயக்குவார் என கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தில், 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்றும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.