close
Choose your channels

படித்து கொண்டே விபச்சாரம் செய்த கல்லூரி மாணவி படுகொலை

Thursday, February 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண் பெங்களூரில் படித்து கொண்டே விபச்சாரம் செய்த நிலையில் பேரம் படியாததால் வாடிக்கையாளர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.

உகாண்டாவை சேர்ந்த இளம்பெண் புளோரன்ஸ் நகயாகி. இவர் பெங்களூரில் தங்கி படித்து வந்தார். படித்து கொண்டே கூடுதல் செலவுக்காக விபச்சாரமும் செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு வேலை தேட வந்த இஷான் என்பவரிடம் ரூ.5000 பேரம் பேசிய புளோரன்ஸ், அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார்.

ஆனால் அங்கு வேறொருவர் புளோரன்ஸ்க்காக அதிக தொகையுடன் காத்திருந்ததால், இஷானிடம் பேசிய தொகையைவிட அதிகம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு இஷான் சம்மதிக்கவில்லை. இதுகுறித்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென இஷானை புளோரன்ஸ் கத்தியால் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இஷான், புளோரன்ஸ் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தி கொலை செய்தார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இஷானை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கல்வி கற்க வந்த உகாண்டா இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.