close
Choose your channels

சீரியல் நடிகையுடன் முறையற்ற காதல். சட்டை கிழிந்து சந்தி சிரித்த சம்பவம்

Friday, April 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனம் தயாரித்து வரும் நெடுந்தொடர் 'வாணி ராணி'. இந்த நிறுவனத்தின் மேலாளரராக சுகுமாறன் என்பவர் இருந்து வருகிறார். இவர் தனது மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் 'வாணி ராணி' சீரியலில் நடித்து வரும் நடிகை சபீதா ராயை வீட்டிற்கு வரவழைத்து முறையற்ற காதலில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு சபீதா ராய்க்கும், சுகுமாறனுக்குக் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதால் சபீதாவை சுகுமாறன் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். ஆனால் சபீதாராய் வீட்டின் வெளியே நின்று சுகுமாறனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுகுமாறனின் சட்டை கிழிந்தது. இருவரும் மாறி மாறி அடித்து கொண்டதால் அந்த பகுதியே பரபரப்பானது.

இதுகுறித்த தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீசார் சுகுமாறன், சபீதா ராய் ஆகியோர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

பெரும்பாலான தமிழ் சீரியல்களில் முறையற்ற காதல், அடுத்தவர் மனைவி அல்லது கணவனுடன் தொடர்பு குறித்த கதையம்சமே இருப்பதால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் அந்த சீரியல்களில் நடிப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் அதே நிலையை கடைபிடித்து வருவது வேதனையை தருவதாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.