close
Choose your channels

போலீஸ் வேடத்தில் நடிக்கும் கணவன்-மனைவி நடிக்கும் சிங்கிள் ஷாட் படம்

Friday, April 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருள்நிதி, இனியா நடித்த 'மெளனகுரு' படத்தில் அழுத்தமான போலீஸ் கேரக்டரில் நடித்த நடிகை உமா ரியாஸ்கான், மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் 'சென்னை விடுதி' இந்த படத்தில் அவருடைய கணவர் ரியாஸ்கானும் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஷெபி என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு உரிய இன்னொரு சிறப்பு என்னவெனில் இந்த படம் முழுவதும் ஒரே ஒரு சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து உமா ரியாஸ்கான் கூறியதாவது:

'சென்னை விடுதி' இயக்குனர் ஷெபி எனது கணவரின் நண்பர். இது ஒரு சிங்கிள் ஷாட் படம் என்று அவர் சொன்னதும் எங்களால் இந்த படத்தை தவிர்க்க முடியவில்லை. சென்னையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நடக்கும் கொலையை விசாரணை செய்யும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நானும், சப் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் எனது கணவர் ரியாஸ்கானும் நடித்துள்ளோம். கேரளாவில் போடப்பட்ட செட் ஒன்றில் இந்த படத்தின் முழு பகுதியும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஒரு சிங்கிள் ஷாட் படம் என்பதால் இந்த படத்தில் நடிப்பது ஒரு சவாலாக இருந்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸ் காட்சியாக இருந்தாலும் சிரிப்பு காட்சியாக இருந்தாலும் கவனத்துடன் நடிக்க வேண்டிய நிலை. எங்களுடைய அனுபவம் எங்களுக்கு கைகொடுத்ததால் படத்தை சிறப்பாக முடித்துவிட்டோம்' என்று கூறியுள்ளார்.

இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.