close
Choose your channels

ஜெயலலிதா நினைவு இல்லம் ஆகிறது 'வேதா இல்லம்'. விரைவில் அறிவிப்பு?

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன், அதிமுக வங்கிக்கணக்கு முடக்கம் ஆகியவை எதிர்த்தரப்பினர் கூட எதிராபாத அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் இன்னொரு முக்கிய அறிவிப்பு என்னவெனில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, அவரது நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான்.

தமிழக மக்களின் இந்த ஆசையும் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'வேதா இல்லம்' நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று விரைவில் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பார் என்று முதல்வரின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது போயஸ் கார்டனில் உள்ள 'வேதா இல்லத்தில் சசிகலா வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.